திண்டுக்கல், டிச. 18 –

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லாததால், கால்நடை வளர்ப்பாளர்கள் கலங்கி போய் உள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு கால்நடை மருத்துவ மனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் இல்லை என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் இப்பேரூராட்சியை சுற்றி பண்ணைக்காடு , ஊத்து, தாண்டிக்குடி , கடுகுதடி, மங்களம்கொம்பு பூலத்தூர் , முளையூர், வடகரை பாறை, பெருமாள் மலை என 50 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பகுதிகள் உள்ளதாகவும். அங்கு வசிக்கும் கிராமத்து மக்கள் குடும்ப பொருளாதார மேன்மைக்காகவும், விவசாய பயன்பாட்டுக்காகவும் பல்வேறு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
தற்போதும் தமிழக அரசின் கிராமத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மைப் படுத்துவதற்காக குறிப்பாக கிராமத்து பெண்களின் சுய வருமானம் ஈட்டுவதற்காக மாடு, ஆடு, கோழி என அம்மக்களுக்கு இலவசமாக கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கி வருகிறது. ஆனால் அக்கால்நடைகளுக்கு தட்பவெப்பநிலை மாறுதல் மற்றும் தொடர்மழையினால் ஏற்படும் நோய்தொற்றுகள் ஏற்படும் போது அவர்கள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனையை நாடி வருகின்றனர் . இரண்டாண்டுகளுக்கும் மேலாக இங்கு மருத்துவர் இல்லாததால் அக் கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமலும், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் கால்நடைகள் உடனடியாக உயிரிழக்கின்றன. மேலும் இயற்கைக்கு மாறாக வனவிலங்குகளான காட்டெருமை மற்றும் கொடிய விலங்குகளால் வளர்ப்பு குதிரை மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளும் அவ்விலங்குகளால் தாக்கப்பட்டு படுகாயங்கள் அடையும் கால்நடைகளை தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியாமல் 100 க்கும் மேற்பட்டவைகள் தற்போதும் உயிரிழந்து வருவதாகவும். அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் வருவாய் இழப்பதுடன் தங்கள் வளர்ப்புச் செல்ல பிராணிகளை இழக்கும் அவலத்தில் உள்ளார்கள். மேலும் நாட்டு இன கால்நடைகளின் எண்ணிக்கையும் விரைவாக குறைந்து வருதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளூர் மற்றும் மாவட்டம் மற்றும் மாநில அரசின் கவனத்திற்கு புகார் மனு மற்றும் இ.மெயில் என பல்வேறு காலக் கட்டத்தில் அளித்தும் இப்பிரச்சினைக் குறித்து கவனிக்கப் படாமலே இருக்கிறார்கள். என தங்கள் ஆதங்கத்தை மனம் தளர்ந்த நிலையில் கலங்குகின்றனர்.. இனியாவது காலம் தாழ்த்தாமல் விரைந்து தமிழக அரசு செயல்பட்டு அப்பகுதியின் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுமா என்ற காத்திருப்போடு கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here