தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்பழு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பிலான 8905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் நடைப்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை, ஆக. 30 –
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள விளையாட்டு த்திடலில் தமிழ்நாடு மின்சாரம் வாரியம் மின் பழு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பிலான 8905 ம்புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்ட தொடக்க விழாவும், அதேப் போன்று கொளத்தூர் தொகுதியில் லோகோ செட் காந்தி நகர் ஜிகேஎம் காலனி 25 வது தெரு, ஜிகேஎம் காலனி 30 வது தெரு, வி.வி.நகர்2வது தெரு, பூம்புகார் நகர் 1 வது மெயின் ரோடு மற்றும் யுனைடெட் காலனி 2வது தெரு ஆகிய 6 இடங்களில் வளை சுற்றுத்தர அமைப்புடன் கூடிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து அதனையும் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் அத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்பு அத்திட்டக் குழுவினரிடையே இத்திட்டப் பணிகளை 4 மாதக் காலத்தில் முடிக்கவும் அறிவுறுத்தினார்.
புதிய மின்மாற்றிகள் மாற்றும் திட்டம் மூலம் அடையப்போகும் பயன்கள்
தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சில மின் மாற்றிகளில் அதிக மின் பழுவும், சில மின் மாற்றிகளில் கடைமுனை பகுதிகளில் உச்ச நேரங்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடும் ஏற்படுகிறது. மேலும் சில இடங்களில் மின் பாதைகளின் நீளம் அதிகமாக உள்ளதாலும், பல நுகர்வோர்கள் அந்த மின் பாதையில் இருந்து ஒரே நேரத்தில் மின் சாதனங்களை பயன் படுத்துவதாலும் கடைமுனை மின் நுகர்வோருக்கு குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
மேற்கொண்ட குறைபாடுகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மின் பகிர்மான வட்டங்களிலும் மின் பளுவை குறைப்பதற்கு 5,705 கூடுதல் மின்மாற்றிகளும், குறைந்த மின்னழுத்தத்தை சீர் செய்ய 3,200 கூடுதல் மின்மாற்றிகளும் என மொத்தம் 8905 மின்மாற்றிகளை ரூ.625 கோடி மதிப்பிலான திட்டம் வகுக்கப் பட்டு அத்திட்டம் இன்று செயலாக்கத்திற்கான வடிவம் பெற்றுள்ளது. இத்திட்டம் அடுத்த 4 மாதங்களில் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இதனால் அந்தந்த இடத்திற்கு தகுந்தாற் போல் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் மின் பளுக்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் மின் மாற்றியின் சுமை குறைக்கப் பட்டு அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின் விநியோகம் வழங்கப் படும். என அத்திட்ட நிபுணர்கள் கருத்தளித்தனர்.
இந் நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் க கன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., எரி சக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ்., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.