தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான 1 சதவீத சந்தைக் கட்டணத்தை இன்று சட்டப் பேரவையில் விதி 110 ன் கீழ் ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை, செப். 4 –

இந்தியத் துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு துணித்தொழில் வகிக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கை 1570 ஆகும் இவ்வாலைகள் மூலம் நூற்கப் படும் நூல் நாட்டின் மொத்த நூற்புத் திறனில் 45 விழுக்காடாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள  நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சின் அளவில் 95 விழுக்காடு பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை ஒழுங்கு முறை சட்டம் 1987 பிரிவு 21 ன் படி பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு சந்தை நுழைவு வரியாக 1 விழுக்காடு விதிக்கப் படுகிறது. மேற்படி சட்டத்தின் படி பருத்திப் பொதி பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாக கருதப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் போது 1 விழுக்காடு வரி    (சந்தைக் கட்டணம் ) விதிக்கப் படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது பருத்தி பொதிகள் மீது மட்டுமே விதிக்கப் பட வேண்டும் மாறாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப் படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலயே பெரும் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டிவுள்ளது. பஞ்சின் மீது விதிக்கப் படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடு நாள் கோரிக்கையாக உள்ளது.

இதனால் மாநிலத்தில் இந்திய பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற் கொள்ளும் போது நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பரமரிக்க வேண்டியதில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைப்பெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில் இந்த வரியினை நீக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது.

இதைக் கருத்தில் கொண்டு நெசவாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரது கோரிக்கையினை ஏற்று பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு முதலியனதற்கான 1 விழுக்காடு வரியை ரத்து செய்யப் படுகிறது. இந்தக் கூட்டத் தொடரிலயே இதற்கான உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here