தஞ்சாவூர், ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் சித்திரை திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரசித்தி பெற்ற நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் 12 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கோவில் செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களில் உற்சவர் சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். மேலும் திருவிழாக்களின்போது இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here