அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் சித்ரா (வயது 18). இவர் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள அவர்களது விவசாய நிலத்தில் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சித்ரா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.