திருவாரூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து அகில இந்திய தொமுச பேரவை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம், மறைந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழக தொமுச தலைவர் வைத்திநாதன் திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவரது தெருவுருவப் படத்திற்கு அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது…
தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் திட்டங்களை இந்தியாவே உற்று நோக்கி பார்த்து வருகிறது எனவும், மேலும் கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு இரண்டு நிமிடம் இடைவெளியிலும், கிண்டிக்கு மூன்று நிமிடம் இடைவெளியிலும், கோயம்பேட்டிற்கு ஐந்து நிமிட இடைவெளிகளிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது என்றார்.
மேலும் கிளாம்பாக்கத்தில் ஆட்டோ முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் தற்போது மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பேட்டி : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்





















