திருவாடுதுறை, மார்ச். 10 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர வாகனங்களும், தந்தையை இழந்த குழந்தைக்கு கல்வி நிதியும், முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தனது திருக்கரங்களால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் சிங்கப்பூர் தொழிலதிபர் சேதுராஜன் நடத்தி வரும் தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. முன்னதாக திருவாவடுதுறை ஆதீனம் கோமதீஸ்வரர் கோயிலில் குரு மகா சன்னிதானம் குருவார தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

அதுப்போன்று பல சேவைகளை தொடர்ந்து செய்து வரும் தாயாரம்மாள் அறக்கட்டளை நிறுவனர் சிங்கப்பூர் தொழிலதிபர் சேதுராஜன் மற்றும் அவரது குழுவருக்கு பொதுமக்கள் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here