தஞ்சாவூர், ஏப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார். அப்போது அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்து சென்றாத அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கிப்பட்டியை அடுத்த மனையேறிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ், செண்பகவள்ளி (48). தம்பதியினர். மேலும் செண்பகவள்ளிக்கு சொந்தமாக 8 ஆடுகள் உள்ளதாகவும், அதனை வளர்த்து வாழ்க்கையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை மனையேறிப்பட்டியில் உள்ள கருமம்குளம் பகுதியில் செண்பகவள்ளி ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக் சந்தேகப்படும் படியாக இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வந்த தாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் வயல்களில் நின்றவர்கள் குளத்துக்கு அருகே சென்று பார்த்த போது, அங்கு செண்பகவள்ளி தலையில் ரத்தக் காயங்களோடு இறந்து கிடந்துள்ளார்.

மேலும் அதுக் குறித்து செங்கிப்பட்டி காவல்நிலைய போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அம் மர்ம மரணம் குறித்தும், மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இரண்டு மர்ம இளைஞர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளோடு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அப் பெண்ணின் மர்ம மரணத்தால் அப்பகுதியில் பெருத்த பரபரப்பு நிலவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here