திருவாரூர்,பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள எஸ் எஸ் நகர் ஓடம் போக்கி ஆற்றில் நேற்று திடீரென லாரி கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் சிறிய காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருவாரூர் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று காலை லாரி ஓடம்போக்கி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த லாரியில் திருவாரூர் மணல்மேடு தெருவினை சேர்ந்த ஸ்ருதி குமார் வயது 20 அதே தெருவினை சேர்ந்த பிரவீன் குமார் வயது 19 திருவாரூர் தியாக பெருமாள் தெரு வினை சேர்ந்த விக்னேஷ் வயது 29 ஆகிய மூவரும் நேற்று அதிகாலை லாரியில் சென்ற பொழுது லாரி எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது புறம் உள்ள ஆற்றில் கவிழ்ந்தது
இந்நிலையில் லாரிக்குள் இருந்த மூவரும் சிறிய காயங்களுடன் அடிபட்டுக் கிடந்தனர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியான அச் சாலையில் அதிகாலையிலே நடந்த அவ்விபத்து என்ற போதிலும், அதனால் வேறு யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது. மேலும் காலியான லாரி அதிகாலை நேரத்தில் எங்கு சென்றது எதற்காக சென்றது மூவரும் எங்கு சென்றார்கள் என்ற கோணத்தில் நகர காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்