மணவாளன்நகர், மார்ச். 01 –

திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட கருணாநிதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் செங்கதிர் செல்வன் என்பவரின் மகன் விஜய் வயது 24  வாடகைக்கு வசித்து வருகிறார்.

சம்பவ நாளான நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதி இரவு 11 மணியளவில் தனது நண்பர்களோடு இருந்த போது அதே கட்டடத்தின் கீழ் பகுதியில் வசித்து வருபவரான ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சீனு என்ற குள்ள சீனு வயது 20 என்பவர் கையில் கத்தியுடன் வந்து வீட்டின் கதவைத்தட்டி கதவைத் திறங்கடா என்று பலமாக தட்டியும் சத்தமிட்டும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் விஜய் கதவைத் திறந்தவுடனயே இங்கேயே செத்துப்போடா எனச்சொல்லி கையில் கொண்டு வந்த கத்தியால் தலையின் இடதுப்புறத்தில் வெட்டிவுள்ளார். மேலும் விஜயுடன் இருந்த அவரது நண்பர்களையும் கை, மற்றும் கால்களால் தாக்கிவுள்ளார். தொடர்ந்து கத்தியைக்காட்டி ஒழுங்காக வீட்டை காலிப்பண்ணுங்கடா என்று கொலை மிரட்டல் விட்டுச் சென்றார்.

சீனு என்ற குள்ளச்சீனு தாக்கியதில் காயம் பட்ட விஜய் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மணவாளன்நகர் காவல் நிலையத்தில் மேற்கூறியபடி தனது புகாரில் தெரிவித்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அப்புகாரில் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனு என்ற குள்ளச்சீனுவை கைது செய்து ஜூடிசியல் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here