திருவாரூர், மே. 27 –

பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸின் தளபதியாகவும், மாநில வன்னியர் சங்க தலைவராகவும் ஒட்டு மொத்த வன்னியர்களின் பாதுகாவலராகவும் விளங்கி அச் சமுதாய மக்களால் மாவீரன் எனப்போற்றப்பட்டு வரும் மறைந்த ஜெ.குருவின் நான்காம் ஆண்டு நினைவு  தினத்தையொட்டி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பாமக வின் இளைஞர்களின் எழுச்சி  நாயகர் மருத்துவர் அன்புமணிராமதாஸை தமிழகத்தின் முதல்வராக்க உறுதியேற்போம் என்ற உறுதி மொழியினை வன்னியர் சமுதாய மக்கள் மற்றும் பாமக கட்சியினர் ஏற்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைப்பொதுச்செயலாளரும் தற்போதய மாநில செயற்குழு உறுப்பினருமான வேணு. பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கணக்கான பாமக மற்றும் வன்னியர் சங்க பிரதிநிகள் கடந்த மே 25 ஆம் தேதியன்று மாவீரன் ஜெ குரு அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டதுணைச் செயலாளர் சண்முகம் மற்றும் ஒன்றிய செயலாளர் அப்பு கட்சியின்  முன்னோடி மாரிமுத்து  ஒன்றிய செயலாளர் அப்பு மற்றும் சத்யா முத்து மகேஷ் விக்னேஷ் சரவணன் சுரேஷ் அமுல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here