திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கூறினார்.
திருவண்ணாமலை, செப். 22-
திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் ரூ.33 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந் நிலையில் நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலக துவக்க விழாவில் கலந்து கொண்ட நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ரயில்வே மேம்பாலப் பணியினை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. பணிகள் தரமாக உள்ளது. எதிர் வரும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் ரயில்வே மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், தலைமை பொறியாளர் ஆர்.சந்திரசேகர், திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் க.முரளி ஆகியோர் உடனிருந்தனர்.