திருவண்ணாமலை, செப்.7-

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் மகாகவி பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் திருவண்ணாமலையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா நினைவுநாள் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு தமிழ்ச்சங்க நிறுவன தலைவர் பா.இந்திரராஜன் தலைமை தாங்கி வ.உ.சி. உருவபடத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் படத்தை பாவலர் குப்பன் திறந்துவைத்து மரியாதை செலுத்தினார்.

விழாவுக்கு வந்த அனைவரையும் தமிழ்ச்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம், வரவேற்றார். வ.உ.சி. பெயரில் விருது மற்றும் சிலை திறக்க ஆணை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஜவுளிதுறை முன்னாள் உதவி இயக்குநர் நாதன்,  மாவட்ட தமிழ்ச்சங்க நெறியாளர் வாசுதேவன், சக்தி எக்ஸ்னோரா தலைவி லதாபிரபுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட எக்ஸ்னோரா பொதுச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here