திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சின்னம் பேடு கிராமம், படப்பை பெரிய கலனி பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவருக்கு 2மகள்கள் இதில் அவரது 2 வது மகள்  17  வயது மகள் வர்ஷினி என்பவர் கடந்த 17 ஆம் தேதி காலை 10 மணியளவில் வேலை தேடி செங்குன்றம் செல்வதாக தனது தந்தையிடம் கூறிவுள்ளார். அதற்கு அவரது தந்தை மறுக்கவே அவரது மகள் தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை, தனது மகள் காணமல் போனது குறித்துஅக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் இது வரை அவரை பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை. ஆதலால் இது குறித்து வழக்கு பதிவு செய்து தனது மகளை தேடி தரும்படி காவல் நிலையத்தில் புகார் மனுவை அவரது தந்தை அளித்துள்ளார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணமல் போன இளம் பெண் வர்ஷினி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here