கும்பகோணம், மார்ச்.29 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா அறிமுக கூட்டம் மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட திமுக செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் நசீர் முகமது, ஒன்றிய செயலாளர்கள் குகூர் அம்பிகாபதி, கோ. க அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன், மேயர் சரவணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாநில துணை பொதுச்செயலாளர் முருகன், இந்திய முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவளவன்,  முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன், சட்டமன்ற தொகுதி செயலாளர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் ஜிவபாரதி, மாவட்ட செயற்குழு ஜெயபால், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, மாநகர செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு மணிமுத்து, ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுதா கலந்து கொண்டு பேசுகையில் எவ்வளவோ தலைவர்கள் இந்த தொகுதியை கேட்ட போதிலும் ராகுல் காந்தி என்னை நம்பி இந்த தொகுதிக்கு அனுப்பி இருக்கிறார். ராகுல் காந்தியே இங்கு நிற்பதாக கருதி அனைவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். தற்போதைய  மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பேசும்போது சொன்னார், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார். நான் புதிய வேட்பாளராக இருந்தாலும் நான் ஏதாவது சிறு தவறுகள் செய்தால் பொறுத்து, மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வேட்பாளராக அறிவித்த ஒரே நொடியில் மயிலாடுதுறை மக்களின் மனதில் குடியேறினேன். இப்போது வாக்குறுதி அளிக்கிறேன் நான் மயிலாடுதுறையில் உங்களோட நிரந்தரமாக வசிக்கப்போகிறேன். ஜி.கே வாசன், கிருஷ்ணசாமி போன்ற ஒற்றை மனிதர்கள்தான் பாஜகவில் கூட்டணியில் உள்ளனர். எனவும், ஆனால் இந்தியா கூட்டணியில் பலம் வாய்ந்த,  கொள்கை உறுதிக் கொண்டவர்கள் கூட்டணியில் உள்ளனர். மேலும் இத்தேசம் மீண்டும் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவும், இந்த யுத்தத்தில் காந்தி ஜெயிக்க வேண்டுமே தவிர, கோட்சே ஒருபோதும் ஜெயித்து விடக்கூடாது என்று அப்போது வேட்பாளர் சுதா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கோசி மணி இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here