சென்னை, ஆக. 06 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு மகாகவி பாரதியாரின் புகழைப் போற்றும் வகையில் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகள் திருவல்லிக்கேணி மகாகவி சுப்பிரமணியபாரதியார் நினைவு இல்லத்தில் நடைப்பெற்று வருகிறது.
இன்று அதனின் இருபத்து ஏழாவது வாரமாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வானவில் பண்பாட்டு மையம் வழங்கும் ஸ்ரீபவானி நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.




















