திருமுல்லைவாயல், ஏப். 27 –

ஆவடி அருகே 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த நபரை, திருமுல்லைவாயல் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் சோபா செல்வராஜ் இவர் கடந்த 23ஆம் தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த தனது மகள் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் விசாரணை மேற்கொண்டதில் வேப்பம்பேட்டை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் தமிழரசன்  சிறுமியிடம் தான் உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

உடனடியாக தமிழரசனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் தமிழரசன்  இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் திருமுல்லைவாயில் ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டதில் அவர் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here