மயிலாடுதுறை, ஏப். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

80 வயது கடந்த தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றிய இளைய மகனிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்தனர். மேலும் தங்களுக்கு படுக்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தவர் பக்கிரிசாமி என்பவரி மகன் கணேசன். (80 வயது) மேலும் அவருக்கு ராஜ பாக்கியம் என்கிற (78 வயது காது கேளாத ) மனைவியும், ராஜி, மதிவானன் என்கிற இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.அதில்  பெரிய மகன் ராஜிவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜிவின் மனைவி சுதா புற்று நோயால் சிலக் காலங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில், அவரது இரண்டாவது மகன் மதிவாணன் என்பவர் தான் சம்பாதித்து கட்டிய வீட்டிலிருந்து, தன்னையும் அவரது மனைவியையும், வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தி அவர்களை அடித்து சில நாட்களாக துன்புறுத்தி வந்த தாகவும், கணேசன் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் நேற்று அரிவாளை எடுத்து கொண்டு என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டி.எங்களை வெளியேற்றினார் எனவும்  அதனால் என் கிராம மக்கள் என்னை அழைத்து அடைக்கலம் கொடுத்து தற்போது காப்பாற்றினார்கள். என அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சொந்த உழைப்பில் கட்டிய மாடி வீட்டை, என் இளைய மகன் மதிவாணன் அபகரித்து வைத்துள்ளதை மீட்டு தன்னிடம் வழங்குமாறு, 80 வயது கடந்த அத் தம்பதியர்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

பேட்டி கனேசன் (வயது 80) பெற்றோர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here