நன்னிலம், ஏப். 02 –

திருவாரூர் மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்,  இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்து நிமிடத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது.

இதன் காரணமாக அப்குதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் எள்  மற்றும் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேலும், இம்மழையின் காரணமாக கோடை நெல் சாகுபடி பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கும் என்பதால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் மேலும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here