பொன்னேரி, மார்ச். 11 –
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மகளிரணி சார்பில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலத்தில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொன்னேரி கோட்டம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சித்ரா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தனிவட்டாட்சியர் சுமதி கலந்துக் கொண்டு பெண்கல்வி அவசியம் பற்றியும் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும் இந்நிகழ்வின் போது, எடுத்துவுரைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியை ஆசிரியை மரிய ஜெயந்தி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகளின் நடனம், கவிதைப்போட்டி போன்றவை நடத்தப்பட்டு அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பாளர்கள் அர்ச்சுனன், ராஜன், கோகுல், இளங்கோ மற்றும் தலைமை ஆசிரியைகள் உள்ளிட்டவர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள். நிகழ்வின் இறுதியில் ஆசிரியை சுமித்ரா நன்றிவுரை நிகழ்த்தினார்.