கும்பகோணம், டிச. 01 –

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன் சந்திரசேகர் தமிழன் துணை செயலாளர் பன்னிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் கே.பி செல்வம் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் நாகப்பன் நகர பொருளாளர் விரமுத்து ஒன்றிய செயலாளர்கள் விடுதலை செல்வன் காசி தமிழ் சசிகுமார் மாவட்ட அமைப்பாளர் அலெக்ஸ் கடைக்கோடி தொண்டன் குடந்தை மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் டிசம்பர் 6 சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் அனைவரும் நீல சட்டை அணிந்து பேரணியாக செல்வதாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தபட்சமாக 50 நபர்கள் நீல சட்டை அணிந்து கொள்வது என்றும் இந்த ஆண்டு முழுவதும் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாடுவது எனவும் 50 பொற்காசுகள் அளிப்பது எனவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here