ஆவடி, ஏப். 10 –

ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி சாய்பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள்  சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகா மாயி லஷ்மி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி மற்றும் பாபாவின் பிறந்தநாள் விழாவின் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரையுலக கலைஞர் ஸ்ரீராம்  இன்று அதிகாலை 5 மணி அளவில் நடைப்பெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று , ஸ்ரீ சாய் பாபாவிற்கு காகட ஆரத்தி அபிஷேகம் கணபதி ஹோமம் பகல் ஆரத்தி பால்குட ஊர்வலம் மற்றும் 1008 சுமங்கலி வஸ்திரம்  மஞ்சள் குங்குமம் புடவைகளை வழங்கினார். மேலும் சின்னத்திரை கலைஞர்களும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here