வெள்ளவேடு, மார்ச். 24 –

கோலப்பன் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவரது மகன் ஜெயந்த் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த இவர் தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கோலப்பன்சேரி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் பின்புறத்தில் பலமாக மோதியதில் பலத்த காயமடைந்து. இதில் ஜெயந்த் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தந்தை வெங்கடேசன் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் புகாரின் அடிப்படையில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்ததா ! பார்க்கிங்க் சிக்னல் விளக்கு போடப்பட்டிருந்ததா மேலும் விபத்தில் சாலை விதிமீறல்கள் மீறப்பட்டுள்ளதா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here