கும்பகோணம், மே. 05 –

கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு  சிகிச்சை பிரிவில் குறிச்சியை சேர்ந்த மாரிமுத்து (24) என்பவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இறந்த மாரிமுத்து (24) என்பவரின் மனைவி கிருத்திகாவை மகப்பேறுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு அத்தம்பதியர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த இரு நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் தங்கி இருந்த கிருத்திகாவின் கணவர் மாரிமுத்து நேற்று இரவு மர்மமான முறையில் தலை பகுதியில் காயங்களுடன் மகப்பேறு மருத்துவ வார்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் இவரை மருத்துவமனை ஊழியர்கள் உடற்கூறு ஆய்வுக்காக பிணவறையில் வைத்தனர். மருத்துவமனை மகப்பேறு மருத்துவ பிரிவில் இரவு நேரங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் மாரிமுத்து மகப்பேறு சிகிச்சை பிரிவில் சடலமாக கிடந்ததுள்ளதால் இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மர்மமான முறையில் இறந்தவரின் மரணம் குறித்து உரிய விசாரணை வேண்டும் என்று அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு தீர்வு காணும் வரை மாரிமுத்துவின் உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால். இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here