நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 44.19 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப் பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறுதெரிவிக்கப் பட்டுள்து.

இதுவரை மொத்தம் 3,06,21,469 பேர்  குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 42,363 பேர் குணமடைந்துள்ளனர்.

132 நாட்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000ஆகக் குறைந்துள்ளது; தற்போது இது 3,98,100ஆக உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.27 சதவீதமாகும்.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.33 சதவீதமாக உள்ளது.

தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.73 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.91 கோடியாக அதிகரித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here