தஞ்சாவூர், மார்ச். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவில் முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வர சுவாமி எழுந்தருள ஏழூர் பல்லக்கு புறப்பட்டது.

மேலும் அப்பல்லக்கு அய்யம்பேட்டை, மாகாளிபுரம்,  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை,சூலமங்கலம், நல்லிச்சேரி,  பசுபதி கோவில், இலுப்பக்கோரை. சென்று மீண்டும் இரவு அய்யம்பேட்டை அருகே மதகடி பஜார் அருகே வந்தடைந்தது.

அங்கு அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து,  மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பின்னர் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர், மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் தஞ்சை  போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மேற்பார்வையில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here