இராசிபுரம், ஜூலை. 20 –

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள் மூலமாக, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

இம்முகாமில் 16 நிறுவனங்கள் பங்கேற்றது. அம்முகாமில் கலந்துக்கொண்ட 365 பேரில் 118 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உடனடி  பணி நியமன ஆணை முகாமிலேயே வழங்கப்பட்டது. மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, உதவி திட்ட அலுவலர் மாலதி, பி.டி.ஓ.,க்கள் ரமேஷ், அருண்குமார் வட்டார இயக்க மேலாளர் புனிதா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் அம்முகமில் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here