திருவள்ளூர், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
இளைஞர்களுக்கு கல்வி எப்படி முக்கயமோ அதுப் போன்றுதான் அவர்களின் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூட துவக்க விழா திருவள்ளூர் நகர தலைவர் ஜோஷி பிரேம்ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம். பி டாக்டர் கே ஜெயக்குமார் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் அந்நிகழ்வில் உரை நிகழ்த்திய எம் பி ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரலாற்று சாதனையாக அரசு மருத்துவக் கல்லூரி தான் கொண்டு வந்துள்ளேன் எனவும், மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு மேம்பாலங்கள் சாலைகள் மற்றும் கிடப்பில் போடப்பட்ட பணிகளை தனது முயற்சியால் தொடங்கி அப் பணிகளை நிறைவு செய்துள்ளேன் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவு உடல் ஆரோக்கியமும் முக்கியம் ஆகையால் இது போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தில் இணைந்து தங்களது உடலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.