கொருக்குப்பேட்டை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று திடீரென ரயில் பயணிகள் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு செல்ல முடியவில்லையென அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் வண்ணாரப்பேட்டை அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் இன்று ஒரு மணி நேரமாக அம் மார்க்கத்தில் ரயில் வராததால், அந்நிலையித்தில் வெகு நேரமாக பணிக்காக செல்லக் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவர்கள் கொருக்குப்பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையறிந்து அங்கு வந்த. ஆர்பிஎப், ரயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானத்தில் ஈடுப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அதனால் சென்னை செல்லும் ரயில் மார்க்கத்தில் மீண்டும் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து கால தாமதமாக சென்றது..