பாபநாசம், ஏப். 23 –
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பாலைத்துறையில் உள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயிலுக்கு பாபநாசம் வழியாக பாதயாத்திரையாக நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகச் சென்றனர்.
மேலும் அப்போது, அப்பக்தர்களின் வழிப்பயணத்திற்கு உதவிடும் வகையில் பாபயாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி, ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். உடன் திருவலஞ்சுழி ஸ்ரீலஸ்ரீ அங்கு நா.கோபாலகிருஷ்ண சாமிகள் இருந்தார். மேலும் அவர்களுக்கு தனது அருளாசியை சாமி வழங்கினார்.