புதுச்சேரி, மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர். சம்பத்
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகரில் வசித்து வருபவர்கள் நாராயணன் மைதிலி தம்பதியினர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ள ஆர்த்தி வெகுநேரமாகியும் வீடுத் திரும்பாததைத் தொடர்ந்து, அக்குழந்தையை அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களிலும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தும் அக் குழந்தையை பற்றிய தகவல் தெரியவராத நிலையில் அக்குழந்தையின் பெற்றோர்கள் அதுக் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமியை தற்போது வரை கண்டுபிடிக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் முத்தியால்பேட்டை மணிகுண்டு அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்தையை போலீசார் நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.