சென்னை, நவ. 1 –

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகரக்கூடும் அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறக்கூடும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிடி, மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் என்பதால் இம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மதுரை, தென்காசி, இராமநாதபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகப்பட்சமாக 30 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும்மன்னார் வளைகுடாபகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இன்று முதல் நாள மறுதினம் வரை கேரள கடலோரப் பகுதிகள் லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதுப்போன்று நவ 4 மற்றும் 5 தேதிகளில் கேரள கடலோரப்பகுதிகள் லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here