திருவாரூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சியில் அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 18 இலட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் மணி அவர்கள் முன்னிலையில் முதன்மை பொது மேலாளர் கனேசன் திறந்து வைத்தார்.
அவர் பேசும் போது ஓ.என்.ஜி.சி செயல்பாடுகளையும் மக்கள் நலத்திட்டங்களை பற்றியும் புள்ளி விபரங்களோடு பேசினார்.ஓ.என்.ஜி.சி சுற்று சூழல் பாதுகாப்பில் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருவதாக கூறினார். ஓ.என்.ஜி.சி சமுக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள் விஜய் கண்ணன், சந்திரசேகரன், கல்வி அதிகாரிகள், ஊராட்சி தலைவர் அம்மைநாதன். பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா, ஆசிரியர் விஜயகனேசன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஆசிரியர் கூட்டனி மாவட்ட செயலாளர் ஈ.வே.ரா ஆசிரியர் கூட்டனி மாநில பொதுகுழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் மாணவ மாணவியர் பொதுமக்கள் வடமழை கே.ஆர்.டி.ஸ் NGO பள்ளிகட்டிடத்தை கட்டி தந்தமைக்காக ஊர் பொதுமக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை பாராட்டினர்.




















