திருவாரூர், மே. 12 –

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி. அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மறைந்த முதல் பெண் செவிலியரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்பைப் பகிர்ந்துக் கொண்டு இத்தினத்தை வெகுச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

மேலும், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு தலைமையில்,  செவிலியர்கள் பத்மினி மற்றும் வாசுகி அரசு தலைமை செவிலியர்கள் மற்றும் சக செவிலியர்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்த இவ்விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here