கேரளாவில் ஐஏஎஸ் தேர்வில் வென்ற முதல் பழங்குடி இன பெண்ணுடன் மதிய உணவு சாப்பிட்டு பாராட்டுத் தெரிவித்த ராகுல்...
கேரளாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யா குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிட்டு அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
சமீபத்தில் 2018-ம் ஆண்டு நடைப் பெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை...
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 161.92 கோடியைக் கடந்தது … சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
புதுதில்லி, ஜன. 23 -
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 71 லட்சத்துக்கும் அதிகமாக (71,10,445) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 161.92 கோடியைக் (1,61,16,92,270) கடந்தது. 1,74,72,203 அமர்வுகள் மூலம்...
புல்வாமா தாக்குதல் – முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
புல்வாம:
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது....
நெய்வேலி : சிட்பண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை 30 இடங்களில் சோதனை : ரொக்கம்...
சென்னை, டிச. 22 -
நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 16.12.2021 அன்று சோதனை நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அதன் அறக்கட்டளைகள் வாயிலாக கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. நெய்வேலி, சென்னை, கோவை, நீலகிரி...
புதுச்சேரி மந்திரிசபையில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு : துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்
புதுச்சேரி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து...
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை ..
சென்னை, மே. 17 –
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு மற்றும் அவர் தொடர்பான சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் மீதான...
புதுச்சேரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : விளையாட்டு வீரர்களை வீடு வீடாக சென்று சந்தித்து மீண்டும்...
புதுச்சேரி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அதன் மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது,
புதுச்சேரி மாநில...
குப்வாராவில் நீடித்த 56 மணிநேர துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தொடர்ந்து 3-வது நாளாக பயங்கரவாதிகளுடன் வீரர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தி...
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற வணிகர்கள் கூட்டமைப்பின் இருசக்கன...
பாண்டிச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை...
தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ரோபாக்ஸ் மற்றும் நீர் டாக்சி சேவைகள் – மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்
பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள்
இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கீழ்காணும் தகவல்களை
அளித்தார்.
நீர்வழி போக்குவரத்து என்பது செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் நிலையில், ரோபாக்ஸ் திட்டங்களை
பல்வேறு வழித்தடங்களில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 7 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 14 திட்டங்கள் செயல்படுத்துதலின் கீழும் 50 திட்டங்கள் உருவாக்கத்திலும் (மொத்தம் 70) உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 3 திட்டங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வெளியிட்டது.
பெறப்பட்டுள்ள ஆலோசனைகளை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 ல்
அவை முறையாக சேர்க்கப்படும். சில மாநில அரசுகளிடம் இருந்து
ஆலோசனைகள் இன்னும் வரவில்லை.
திறன் இடைவெளி ஆய்வு 21 கடலோர மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. துறைமுகம் மற்றும் கடல்சார் துறைக்கு சிறப்பு
கவனம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உற்பத்தி ஆகிய
துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை இருப்பது
ஆய்வில் கண்டறியப்பட்டது.
பல்திறன் மேம்பாட்டு மையத்தை விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது. செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பங்குதாரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள கட்டிடம் பங்குதாரரிடம் வழங்கப்பட்டு விட்டது.





















