விவிஐபி ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா ஜாமினில் விடுதலை
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்
புதுடெல்லி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு...
புல்வாமா தாக்குதல் எதிரொலி – இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்?
மும்பை:
இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் உடல் சிதறி, உயிரிழந்தனர்.
இதனால், இந்திய மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது....
கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது-கமல்ஹாசன் பேட்டி
புதுடெல்லி:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு...
கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் திட்டம்-கடற்படை தளபதி பகீர் தகவல்
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய மீன்பிடி கப்பலை கடத்தி, அதன் மூலம் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் புகுந்தனர்.
26-11-2008 அன்று மும்பை நகரில் அந்த பயங்கரவாதிகள் 12 இடங்களில் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தொடர் தாக்குதலில்...
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவார்: சித்தராமையா
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.
தனித்து போட்டியிடுவதாக...
தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி பற்றி பரபரப்பு தகவல்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியதற்கு ஜெய்ஷ்- இ -முகமது பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தியது ஆதில்அகமதுதர் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய பரபரப்பு தகவல் வருமாறு:-
ஆதில் அகமதுதர் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கண்டிபா பகுதியை சேர்ந்தவன். தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில்...
காஷ்மீர் எல்லையில் இன்றும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்-இந்திய ராணுவம் பதிலடி
ஸ்ரீநகர்:
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜம்மு...
பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு...
இன்று மாலை நடைதிறப்பு-பெண்கள் வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம்
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும்...

















