Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 102.94 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  64,75,733  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப் பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப் பட்ட மொத்தக் கொவிட் தடுப் பூசிகளின் எண்ணிக்கை,  இன்று காலை 7மணி நிலவரப் படி  102.94  கோடியைக்  (1,02,94,01,119)  கடந்தது.  1,02,28,502  அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்...

மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி மோதல்-6 பேர் பலி

அசோக் நகர்: மத்தியபிரதேசத்தின் கரிலா கிராமப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட 6 பேர், நேற்று இரவு ஆட்டோவில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். விதிஷா சாலையில் பனாயி ஹவெலி கிராமத்தின் அருகில் வந்தபோது, அதே சாலையில் வந்த லாரி கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. ...

பாண்டிச்சேரி அரசு சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : திருவுருவப்...

பாண்டிச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்… புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின்...

புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...

பாண்டிச்சேரி, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் .. புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக, அக்கட்சியின்...

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி

புதுடெல்லி: காஷ்மீரில் கடந்த 14-ந் தேதி சாலை வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (துணை ராணுவம்) மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில்...

ரத்த காயங்களுடன் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் வீடியோ: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது. மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது,...

இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது-பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் பாட்னா மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். டெல்லியில் இருந்து அரசுமுறை பயணமாக இன்று பீகார் மாநிலம், பரவுனி நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி பாட்னா நகரத்தில் குழாய்...

7 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘மைகவ்’ இணையதளம்

பிரதமர்  நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர்  நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள்  பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது. மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது. கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் - வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது. மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி  அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார்.  ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர். 

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS