கும்பகோணம், ஏப். 13 –
திமுகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கவும், மேலும் அவ்வெப்பத்தில் ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து கோடைக்காலம் முடியும் வரை அப்பகுதி மக்களின் தாகத்தினை போக்கும் வகையில் நீர், மோர் மற்றும் குளிர்பான பழரசங்களை வழங்கிடும் படி கோடைக்கால பந்தலை திறந்திடும் படி, திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட தொண்டர்களுக்கு அவர் அன்புக் கட்டளையிட்டிருந்தார்.
அதன் படி அக்கட்சியினர் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கும்பகோணம் நகரத் திமுகவினர் சார்பில் அப்பகுதியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் அலுவலக வாயில் முன்பு மிகப்பிரமாண்டமான வகையில் நீர், மோர், குளிர்பான பழரசங்கள் உள்ளிட்ட இளநீர் வழங்கும் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவில் பங்கேற்ற பந்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், துணை மேயர் சு.ப தமிழழகன், ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் இவ்விழாவில் உரை நிகழ்த்திய ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன், ‘முதல்வரின் உத்தரவுப்படி கோடைகாலம் முழுவதும் பொதுமக்களுக்கு தினசரி நீர் மோர் வழங்கப்படும் எனவும் மேலும் தற்போது தமிழக மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் வகையில் நல்லாட்சியை முதல்வர் நடத்தி வருகிறார் எனவும், மேலும், பெண்களுக்கான இலவச பஸ் பாஸ், மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எனவும், மேலும், அரசின் நல்லாட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்’ என அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர், பொதமக்களுக்கு தர்பூசணி, இளநீர், கொய்யா, திராட்சை, வாழை பழம், நுங்கு கனிகள், சர்பத், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நசீர்முகமது, மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், மாநகர பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கூகுர் அம்பிகாபதி, கோ.க அண்ணாதுரை, கணேசன், சுதாகர், பொதுக்குழு உறுப்பினர் கவிதா மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் குட்டி தட்சிணாமூர்த்தி, ஆனந்தராமன், முருகன், தமிழ்ச்செல்வி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செந்தில், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் மாநகராட்சி மாமன்ற செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் மற்றும் திரளான திமுக தொண்டர்கள், அப்பகுதிவாழ் பொதுமக்கள் என திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்று மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்ற இவ்விழவினை அவர்கள் சிறப்பித்தனர்.























