பாண்டிச்சேரி, பிப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..

கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 46; இவர் அங்குள்ள அரசு மருத்துவமனை எதிரே ஜல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அவசர வேலைக்காரணமாக கடை ஊழியரை பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், பாஸ்கர் இருக்கிறாரா என கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முதலாளி வெளியே சென்றுள்ளதாக கூறிய நிலையில், தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன் எனக் கூறி, மொபைல் போனில் பேசிக்கொண்டே கல்லா பெட்டி இருக்கும் அறைக்குள் சென்றுள்ளார்.

பின்னர் பணப்பெட்டியில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் டைரியை எடுத்து கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். அம் மோசடித் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதுக்குறித்து கடை உரிமையாளர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் நடைபெற்ற இந்த மோசடிக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here