திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 வது வட்ட அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை 15வது வட்டச் செயலாளர் காமராஜ் செய்திருந்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் பலராமன் 15 வது வட்டம் தனக்கு எப்போதும் வாக்குகளை அள்ளித் தருகிற பகுதி என்றும் மேலும் தான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலின் போது எனக்கு அதிக வாக்களித்த பகுதி மணலி புதுநகர் என்றும் அப்போது பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் 15வது வட்டப் பகுதி அதிமுக தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.