குடவாசல், மே. 06 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த குடவாசல் பகுதி நகரசெயலாளர் பால்கிட்டு மற்றும் மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் பேக்கரியில் பொருட்களை வாங்கி கொண்டு, மேலும் கட்சிப் பணிக்காக துண்டுப்பிரசுரம் கொடுத்து நிதி கேட்டுள்ளார்கள்.
அப்போது கடையின் பணியாளர் மனோகர் என்பவர் முதலாளி வந்தவுடன் வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் தற்போது பணம் வேண்டும் என இருவரும் கூறியதை அடுத்து பணியாளர் 20 ரூபாயை கொடுத்துள்ளார். இதனால் கட்சியினருக்கும், கடைக்காரருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் கடையில் உள்ள பொருட்கள சேதப் படுத்தியுள்ளனர் எனக் கடையில் உள்ள பணியாளர் தெரிவிக்கிறார்.
உடனே இவ்விவகாரம் தொடர்பாக கடைக்காரர் குடவாசல் வர்த்தக சங்கத் தலைவரிடம் கூறியதை அடுத்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் குடவாசல் காவல் நிலையத்தில் இச்சம்பவம் பற்றி நகர செயலாளர் பால்கிட்டு மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி: மனோகரன்- கடை ஊழியர்.