மாதவரம், ஜூன். 18 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியத்திற்குட்ட மாதவரம் பேருந்து நிறுத்தம் அருகே திருவள்ளுர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வ சேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரமூர்த்தி , மாதவரம் ஊராட்சி மன்ற தலைவரும் கிளை கழகச் செய லாளருமான சுரேஷ், துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் தமிழ் சாதிக், முரசொலி முர்த்தி, ஆகியோர் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். இதில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஆரணி அன்புவாணன், விச்சூர் சகாதேவன், வழக்கறிஞர் காந்தி, ஒன்றிய பிற அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.