மதுக்கூர், ஜன. 11 –

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், கன்னியாகுறிச்சி கிராமத்தில் இன்று நெல் பயிரைத் தாக்கும் குலை நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுக் குறித்து அங்கு நடைப்பெற்ற வயல்வெளி பள்ளி பயிற்சியின் போது அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனைகளை மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார்.

மதுக்கூர் வட்டாரம், பெரிய கோட்டை, கன்னியாகுறிச்சி, களிச்சான் கோட்டை மற்றும் பாவோஜி ரகுராம சமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்களில் தற்போது குலை நோயின் தாக்குதல் தென்படுவதாக தெரிய வருகிறது.

மேலும், தற்போது வானிலை மேகமூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதால் குலை நோய் தாக்குதல் அதிக அளவில் தென்படுவதாக அறிய வருகிறது.

இதனைத்தொடர்ந்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கும் போது, நெல்லின் அனைத்து வளர்ச்சி பருவங்களிலும் குலை நோய் நெற்பயிரை தாக்குகிறது. மேலும் குறிப்பாக தாளடி நடவு செய்துள்ள நெல் வயல்களில் 55 நாள் முதல் 60 நாள் காலக்கட்டத்தில் பயிர்களில் நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது எனவும்,

மேலும் இதனால் இலைகளில் கண்வடிவப் புள்ளிகள் முதலில் தோன்றி பின் ஒருங்கிணைந்து இலையின் ஓரம் காய்ந்து காணப்படுமெனவும், மேலும், அதிகளவில் பாதிக்கும் போது பயிர் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். எனவும்,

மேலும் நெல்லின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும் போது கழுத்து பகுதி கருப்பாக மாறிவிடும். நிலை ஏற்படும் எனவும், மேலும் அப்போது, கதிர்கள் ஒடிந்து விடும். என்றார்.

தொடர்ந்து அந்நோய் கணுக்களை தாக்கும் பொழுது கருப்பு நிறமாக மாறி கணுக்கள் உடைந்து விடும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்நோயினை கட்டுப்படுத்த விவசாயிகள் ட்ரை சைக்ளசோல்  75 டபிள்யூ பி .120 கிராம் அல்லது அசொஸ்க் சிட்ரோபின் 23 எஸ்பி 200 மிலி.. ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 20லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு டேங்குக்கு ஒரு லிட்டர் கரைசல் 9 லிட்டர் தண்ணீர் வீதமும், அதுப்போன்று மா ஒன்றுக்கு ஏழு டேங்கு வீதம்  10 லிட்டர் அளவிலான கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து அந்நோயினை உடனடியாக தடுத்திடலாம் என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வயல்வெளியில் நோய் தாக்குதல்களை எவ்வாறு கண்டறிவது அதற்கான கட்டுப்பாடு முறைகள் என்ன என்பது குறித்தும், மேலும் வருமுன் காப்பதற்கான இயற்கை முறைகள் போன்றவை பற்றி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு ஆகியோர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்ற வயல்வெளிப் பள்ளியில் விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர்.

மேலும், வயல்வெளி பள்ளியின் முடிவில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கும் நெல்லில் ஒருங்கிணைந்த  பயிர் பாதுகாப்பு முறைகளுக்கான கையேடுவை கன்னியாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேம்பரசி தமிழரசன் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் காலத்தே கவனிக்காத பயிர் களத்துக்கு நெல்லை கொண்டு வராது. என்பதை விவசாயிகள் உணர்ந்து செயல்படவேண்டுமென் அப்போது அவர்களுக்கு மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் எடுத்துரைத்தார்.

எனவே, விவசாயிகள் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலின் தன்மை அறிந்து நெல் மகசூலை பாதிக்கும் நிலை அறிந்து ஏற்ற காலத்தில் உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here