திருவண்ணாமலை டிச.10-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் சுகநதி கால்வாய் ஓரம் விறகு வெட்டும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பாதிரி கிராமத்தில் வசிப்பதற்கு வசதியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னாவரம் கிராமத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாபு தலைமையில் நடந்தது. துணை தாசில்தார் அகதீஸ்வரன், வருவாய் ஆய்வாளர் இப்ராகீம் ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் கலந்து கொண்டு விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு பாதிரி கிராமத்தில் வசிப்பதற்கான இலவச மனை பட்டாவினை வழங்கினார். அப்போது அங்கு வசிக்கும் 4 மாணவர்கள் சென்னாவரம் தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களை பாதிரி கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டிருப்பதாகவும் தாசில்தார் மாணவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here