சென்னை, அக். 02 –
நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையக் கவுன்சில் IACHRC சார்பில் உலகசாதனை படைத்தவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறையின் ZRUCC உறுப்பினர் செல்வகணேஷ் மற்றும் இந்திய உணவு கழகத்தின் தலைவர் திருமதி. மகாலக்ஷ்மி மற்றும் விஜிலன்ஸ் மக்கள் இயக்கம், நமது விஜிலன்ஸ் பத்திரிக்கை நிறுவனர் மற்றும் ஆசிரியருமான டாக்டர் அம்பாசிடர் ஆனந்தன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.