சென்னை ஜூலை 31 –

 

சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நேற்று 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்தியா பாக்கிஸ்தான் போரில் பாகிஸ்தானை வென்று வங்கத்தேசம் என்ற தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.

இந் நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களாக வருகைப் புரிந்த 1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் முதலமைச்சர் தெரிவித்து விட்டு அவர் பேசும் போது இந்திய இராணுவத்திற்குத் தமிழர்கள் தொடர்ந்து தம்முடைய பங்களிப்பினைச் செலுத்தி வருவதை குறிப்பிட்டு பேசினார். மேலும் தாய்நாட்டிற்காக இராணுவ வீரர்கள் தம் இன்னுயிரையும் தியாகம் செய்ய தயங்குவதில்லை என புகழாராம் சூட்டிய முதலமைச்சர், அவர்கள் அவர்தம் குடும்பங்களுக்கு உதவுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் 1971 ல் போர் நிகழ்ந்த போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்றைய பிரதமர் அன்னை இந்திராகாந்தியை சென்னைக்கு அழைத்து வந்து தீவுத்திடலில் நடைப்பெற்ற விழாவில் நாட்டு பாதுகாப்பு நிதியாக ரூ.6 கோடி வழங்கியதை நினைவுக்கூர்ந்த முதலமைச்சர் அன்றைய சூழலில் இந்தியா முழுவதும் வசூலான 25 கோடி ரூபாயல் தமிழ்நாடு வழங்கிய 6 கோடி என்பது, நான்கில் ஒரு பங்கு நிதியாகும் என்ற குறிப்பிட்டார்.

மேலும் வங்கதேசப் போரில் கலந்து கொண்ட மாவீரர்களுக்கு மட்டுமல்ல அவர்தம் குடும்பங்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒருவர் இராணுவத்தில் இருக்கிறார் என்றால் அவர்மட்டுமல்ல அவரது கும்பமே இராணுவத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம் என்ற குறிப்பிட்டார். நாட்டுக்காக அர்பணித்துக் கொண்ட குடும்பங்களுக்கு நாம் முதலில் மரியாதை செலுத்தியாக வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் இத்தகைய போர் வீரர்களோடு சேர்ந்து நிற்பதில் பெருமை அடைகிறேன். இப்போரில் உயிர் நீத்த வீரர்களின் துணைவியருக்கும் தாயார்களுக்கும் எனது வீர வணக்கம் என்றார். இவ்விழாவில் இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்த வெற்றி தீபம் தென்மண்டல இராணுவ தளபதியால் முதலமைச்சரிடம் வழங்கப் பட்டது.

  

பின்பு தீபத்தை மேடையில் வைத்து தீபத்திற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

இந்திய பாகிஸ்தான் போரில் வான் வெளி தாக்குதலை தடுத்து கப்பல்களை சிதறடித்து வெடிக்கச் செய்து 93 ஆயிரம் எதிரி படைவீரர்கள் சரணடைய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த ரியல் அட்மிரல் திரு.எஸ்.ராம்சாகர் ஏவிஎஸ்எம் வீர் சக்ரா என்.எம். ஒய்வு அவர்களையும் தன் சுயபாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் படைக்குழுவினருடன் பதுங்குக் குழியின் வழியாக முன்னேறி எதிரிப் படையில் பலத்த சேத த்தை ஏற்படுத்தி படைகள் சரண்டைய காரணமாக இருந்த கர்னல் திரு.ஏ.கிருஷ்ணசாமி வீர் சக்ரா வி.எஸ்.எம். அவர்களையும் இப்போரில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தினையும் போரில் பங்கேற்ற 6 போர் வீரர்களையும் பாரட்டி நினைவுப் பரிசாக இந்திய – பாகிஸ்தான் போரின் நினைவு முத்திரைப் பொறிக்கப் பட்ட தஞ்சாவூர் தட்டினை முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்

இவ்விழாவில் தென் மண்டல இராணுவத் தளபதி திரு.ஏ.அருண், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொது மற்றம் மறுவாழ்வுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந் நாதன் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் இராணுவ உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here