திருவண்ணாமலை, ஆக 1 –

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ஆம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள், சிறைகாவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் கடந்த 26ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைப் பெற்று வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைப் பெற்றுவரும் உடற்தகுதி தேர்வில் திருவண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு முதலில் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடல் அளத்தலும் தொடர்ந்து 1500 மீட்டர் ஓட்டமும் நடந்தது. குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் இலக்கை அடைந்தவர்கள் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் 5வது நாளான நேற்று முன்தினம் நடந்த உடற்தகுதி தேர்வில் பெண்கள் பங்கேற்றனர்.

இதற்காக 413 பேருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டது. பின்னர் நடந்த உடற்தகுதி தேர்வில் உயரம் அளத்தல் எடை சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here