காஞ்சிபுரம், மே. 20 –

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மூத்த மகள் நந்தினி (16), இளைய மகள் தீபா (10) ஆகியோரை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் காவல் நிலையத்தில் சரண்

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டையின் போது இரண்டு மகள்களும் தந்தையை கண்டித்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக கோவிந்தராஜ் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவுச் செய்து அச் சம்பவம் குறித்து ஒரகடம்  காவல்துறையினர் தீவிர விசாரணை. நடத்தி வருகின்றனர்.

இதுக்குறித்து  ஒரகடம் காவல்நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரைணையில் சின்ன மதுரபாக்கம் பகுதியில் வசித்துவருபவர் கோவிந்தராஜ்(40),  கீதா (35) தம்பதியனருக்கு ஒரு மகன் மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர் எனவும் மேலும், கோவிந்தராஜ் வேலையின்றி இருந்து வந்ததாகவும், இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான இவர் அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் இதனால் அவ்வப்போது குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடேயே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது..

இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கம் போல் கோவிந்தராஜ் குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் முதல் மகள்-நந்தினி (16) நான்காம் வகுப்பு படித்து வரும் நான்காவது மகள் தீபா (10) ஆகிய இருவரும் தந்தை கோவிந்தராஜிடம் அவ்வப்போது குடித்துவிட்டு தனது தாயிடம் பிரச்சனை செய்வதாக கூறி தந்தையிடம் சண்டையிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரத்தில் தந்தை இரண்டு சிறுமிகளையும் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் சிறுமிகள் கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மயங்கிய நிலையில் இருவரும் இருந்துள்ளதுள்ளனர். இதனையெடுத்து அவசர ஊர்த்திக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த அவர்கள் ஏற்கனவே சிறுமிகள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் அளித்து கோவிந்தராஜனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையெடுத்து இரண்டு சிறுமிகளின் பிரேதங்களை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரண்டு சிறுமிகளை கொன்ற கொடூர தந்தை கோவிந்தராஜனிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது இரண்டு மகள்களையும் தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அக்கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here