தேனி : ஆக, 18- 73-வது சுதந்திர தினவிழா வினை முன்னிட்டு தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான செஸ் போட்டி இன்று அகாடமி வளாகத்தில் நடைப்பெற்றது.
இப் போட்டி அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமையில் நடந்தது தேனி ரோட்டரி மெட்ரோ கிங்ஸ் செயலாளர் ஸ்ரீராமகுரு முன்னிலை வகித்தார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேனி K.S.K மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் N.வள்ளிராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு பரிசுகளை வழங்கினார். மேலும் அகாடமியின் தலைவர் S. சையது மைதீன் வரவேற்புரை ஆற்றினார். போட்டி ஏற்பாடுகளை அகாடமி இணைச் செயலாளர் S. அஜ்மல் கானும் தலைமை நடுவராக R. தேனழகன் ஆகியோர் செயல் பட்டனார். இப் போட்டியில் 10-வயதுக்குட்பட்ட பிரிவில் வெற்றி பெற்றவர்கள் மாணவிகள் ஐந்து பேர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது . அதன் விவரம் 1வது பரிசு S. ஆனந்தபிரியா வும் 2, AG. சாத்விகவர்ஸா, 3, J.சியோனிக்கா 4, J. மிருதுளா , 5 V. விஜயஸ்ரீ, மாணவர்கள் 1,AK.தரணிகரன் 2, S. ராம் சபரிஸ் 3. M. சந்துரு 4.N. திவாகர் 5. V. சந்தோஸ் 13-வயது பிரிவில் வெற்ற மாணவிகள் 1. M. பிரியதர்ஸினி 2.G. மோனிக்கா 3.S.தர்ஸனாஸ்ரீ ,4. PS. சகானா 5. N. அனிஸ தேஜ் அஸ்வினி . மாணவர்கள் 1.A.அல்பி டெரன்ஸ் ஜோஸ் 2.S. தருண் பாலாஜி 3.S.R.M தர்ஷன் 4. J. ரன்ஜெய் 5.S. சன்ஜெய் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்றனார்.
இந்த விளையாட்டு போட்டிகளில் பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.