ராமநாதபுரம், ஜூலை 4–
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராம பொது பொது மக்களிடம் குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறிப்பாக கீழ்வைகை வடிகால் கோட்டம், பரமக்குடியின் கடடுப்பாட்டில் பரமக்குடி, ராமாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் முதுகுளத்துார், வட்டங்களில் உள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டில் முதுகுளத்துார், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் உள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப் படவுள்ளன. அதனடிப் படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடலாடி வட்டத்திற் குட்பட்ட கோட்டையேந்தல், செல்வனுார் மற்றும் பெரியகுளம் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து கிராம பொது மக்கிளிடையே எடுத்துரைத்தார் .
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம்திருவாடானை வட்டத்திற்குட்பட்ட குருமிளாங்குடி, வட்டாணம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்குட்பட்ட ஏ.ஆர்.மங்களம் கிராமம் ஆகிய கிரமங்களுக்கு நேரடியாக சென்று குடிமராமத்து திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய்களை ஆய்வு செய்தார்.
கிராம மக்களிடையே மாவட்ட ஆட்சித்தைலவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 கண்மாய்கள் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகள், கலஞ்குளை சீரமைத்தல் மற்றும் மறுகட்டுமானம் செய்து, வரத்துக் கல்வாய்களை புனரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்படும்.
இந்த குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும் அப்பகுதி விவசாய குழுக்களின் பங்களிப்பாக 10 சதவீத தொகையுடன் இப்பணிகள் பதிவு பெற்ற விவசாய சங்கங்கள் மூலம் நியமன முறையில் செயல் படுத்தப்படும் . இவ்வாறு மேற் கொள்ளப் படும் புனரமைப்பு பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் தரமான முறையில் வெளிப்படை தன்மையுடன் மேற் கொள்ளப் படும்.
மேலும், பொது மக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ஊரக பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட வேண்டும், அதேபால மழை நீரை சேகரித்திடும் விதமாக அதிக அளவில் பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற் படுத்திடவும் முன் வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்த நிகழ்வின் போது பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் நீர்வள ஆதார அமைப்பு வைகை வடிநில கோட்ட வெங்கிடகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.